

எடிட்டர் லெனின் கதையினை எழுத ,அறிமுக இயக்குனர் EV. கணேஷ் பாபு நடித்து இயக்கியிருக்கும் படம் கட்டில்…இவருடன் ஸ் ருஷ்டி டாங்கே, கீதா கைலாசம், விதார்த், இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா சினேகன் ஆகியோர் நடிச்சிருக்காங்க..
கதை நாயகன் கனேஷ் ன் – மகன் சுரேஷ் (விதார்த்) பாரம்பரிய வீட்டை காட்டி நமக்கு கதை சொல்லுகிறார்.
மூன்று தலைமுறை யை, கடந்து வாழ்ந்து வந்த பாரம்பரிய வீட்டினை , இளையவன் கணேஷ் -ன் உடன்பிறந்தவர்கள் விற்க முயல…மனமில்லாமல் கணேஷ் அவரது மனைவி (ஸ்ருஷ்டி டாங்கே) மற்றும் அம்மா (கீதா கைலாசம் ) ஆகியோர் ஒப்பு கொள்கின்றனர்.அங்கே மூன்று தலைமுறைகளை யும் கண்ட கட்டில் ஒன்று இருக்க, அவரது உடன்பிறப்புகள் அதையும் விற்க முயல..கணேஷ் பாபு அதனை, தான் எடுத்துக் கொள்வதாக கூறுகிறார்… அந்த கட்டிலில்தான், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறையினர் பிறந்து வளர்ந்து விளையாடியது நினைவுக்கு வருகிறது.
பத்திரப்பதிவின் போது வீட்டை காலி செய்ய சொல்ல.. முன்னோர்கள் பர்மா வில் இருந்து தேக்கு வாங்கி செய்த கட்டில் இது..அதனையும் வீட்டையும் பத்திரமாக பார்த்துக் கொள் என்று தன் அப்பா சொன்னது நினைவில் வருகிறது கணேஷிற்கு..மேலும் அதோடு பல சந்தோஷமான நிகழ்வுகள் நினைவுக்கு வரவும் ,தன் மகனுக்கு பிடித்தமான கட்டில் என்பதாலும் ,அதை விற்க மனமில்லாமல்,தனக்கு வரும் ஷேர் – ல், கட்டில் செல்லும் அளவிற்கு வீடு வாங்கி அதில் வைப்பேன் என்று வீடு தேடுகிறார்….வீடு அவருக்கு கிடைத்ததா? பாரம்பரிய கட்டிலை காப்பாற்றினாரா ?என்பதே மீதி கதை..
தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரங்களையும் ஒரே நபராக ஏற்று வேரியேஷன் காண்பித்து, சிரமப்பட்டு நடிச் சிருக்காரு.படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஈ.வி.கணேஷ்பாபு.படம் முழுவதும் கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஸ்ருஷ்டி அமைதியான முகத்துடன் அளவாக கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்க…கீதா கைலாசம் சிறப்பாக நடிச்சிருக்காங்க..
படம் கொஞ்சம் ஸ்லோ வாக போனாலும் ஶ்ரீகாந்த் தேவா வின் பின்னனி இசையில் வரும் இரண்டு பாடல்களும் படத்தினை இழுத்து செல்கிறது..இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்திருந்தால் …இன்றைய தலைமுறை யையும் கவர்ந்திருக்கும் “கட்டில்”
