
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் சாயாதேவி நடித்து வெளிவந்திருக்கும் படம் பரமசிவன் பாத்திமா..
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் சுப்பிரமணியபுரம் யோகோபுரம் என்ற இரு ஊர்களுக்கு இடையே நடக்கும் பஞ்சாயத்தே பரமசிவன் பாத்திமா… இந்துக்கள் வாழும் பகுதியான சுப்பிரமணியபுரத்திலும் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியான யோகோ புரத்திலும் உள்ள மக்களுக்கு இடையே அடிக்கடி மத சண்டைகள் ஏற்பட்டு வரும் வேலையில், அவ்வூரை சேர்ந்த கலையரசன் மற்றும் கூல் சுரேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக இருவரும் கொலை செய்யப்படுகின்றனர் . இந்த கொலைகளுக்கான காரணத்தை கண்டறிய இன்ஸ்பெக்டர் கார்வன்னன் தலைமையில் ஒரு டீம் உருவாகிறது. போலீஸ் டீம் இவர்கள் யார் என்பதை கண்டறியும் வேளையில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது உண்மையில் சாயா தேவியும் விமலும் யார்? இவர்கள் ஏன் ஊர் மக்களை கொலை செய்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை..
கதையின் நாயகனான விமல் கதாபாத்திரமாகவே ஒன்றி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் அவருக்கு ஈடாக தன் பங்குக்கு சாயா தேவியும் சிறப்பான நடிப்பை வழங்க
கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தை மெருகூட்டி உள்ளார்..
தீபன் சக்கரவர்த்தி இசை, பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்…
ஒளிப்பதிவாளர் சுகுமார் அழகான ஒளிப்பதிவுடன் கூடிய நடிப்பினையும் வழங்கி உள்ளார்..
இயக்குனர் இசக்கி கார்வண்ணன் குறிப்பிட்ட மாதம் மட்டுமே உயர்ந்தது என்று அதன் பின்புலத்தை சொல்ல முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்..