
கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ் காளி வெங்கட்,, ஷேல்லி, ரோஷினி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மெட்ராஸ் மேட்டினி”..
எழுத்தாளர் சத்யராஜ் மேலாதிக்க வர்க்க கதைகளையே யோசித்து எழுத , சாதரண மக்கள் பற்றி எழுதுங்கள் என மேன்ஷன் இல் இருக்கும் தோழி கூற, ஒரு பாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவரின் கதையை கேட்கிறார்.
இந்த மிடில் கிளாஸ் இருக்கான்கள இவனுங்க வாழ்க்கையில சாவுற வரைக்கும் உழைச்சிட்டு இருப்பானுங்க, எவ்வளவு சம்பாதிச்சாலும் பெருசா அவனுங்களால சந்தோஷமாவே இருக்க முடியாது. அவனோட அடுத்த தலைமுறை படிச்சி வேலைக்கு போய் சம்பாதிக்கும் போதும் அந்த மிடில் கிளாஸ் மனிதனால பெருசா அனுபவிக்க முடியாது. அப்படி ஒருத்தனோட வலியதான் இந்த படம் சொல்லுது.
படத்தில் காளி வெங்கட் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார். பொறுப்பான குடும்பத்தலைவியாக ஷெல்லி, அமைதியாக வலிமையான மகள் தீபிகாவாக ரோஷினி, இருவரும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இக்கதை யை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர்களது எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மிடில் கிளாஸ் குடும்பங்களின் போராட்டத்தினை வலியோடு சொல்லி oru அழகான தீர்வும் கொடுத்திருக்கிறார்…